சென்னை:

டிகையும், காங்கிரஸ் கட்சியின்  செய்தி தொடர்பாளருமான குஷ்பு இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக  தொலைபேசி மிரட்டல் வந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆம்புலன்ஸ் அலுவலகத்துக்கு பெண் ஒருவர் பேசினார். அவர், பட்டினப்பாக்கத்தில் உள்ள நடிகை குஷ்புவின் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது விரைவில்வ வெடிக்கும் என்றும் சொல்லிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.

இதனால் பரபரப்படைந்த ஆம்புலன்ஸ் அலுவலக ஊழியர்கள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து உடனடியாக குஷ்புவின் பட்டினப்பாக்கம் இல்லத்துக்கு விரைந்த காவல்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் குண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதையடுத்து.வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது  தெரியவந்தது. இப்போது,   மிரட்டல் விடுத்தவர் யார் என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.