ஸ்னாக்ஸ் எனக் கடித்த பரிதாபம்.. ஜெலட்டின் வெடித்துப் பலியான சிறுவன்..

திருச்சி, தொட்டியம் அடுத்த ஆலக்கரை கிராமத்தைச்சேர்ந்த கங்காதரன் என்பவர் மீன் பிடிப்பதற்காக அருகேயுள்ள ஒரு கல் குவாரியிலிருந்து மூன்று ஜெலட்டின் குச்சிகளைச் சட்டவிரோதமாக வாங்கி வந்துள்ளார்.

அதில் ஒன்றை வீட்டில் வைத்துவிட்டு இரண்டினை எடுத்துக்கொண்டு மீன் பிடிக்கச்சென்று விட, இவரது 6 வயது தம்பி இந்த ஜெலட்டின் குச்சியை ஏதோ ஸ்னாக்ஸ்  என்று எடுத்துக் கடித்துத் தின்ன முயன்றுள்ளார்.  அப்போது இந்த ஜெலட்டின் குச்சி வெடித்ததில், இச்சிறுவனின் வாய் மற்றும் முகமெங்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டு, தொட்டியம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர்.

இது பற்றி அறிந்த காவல்துறையினர் அச்சிறுவனின் தந்தை மற்றும் சகோதரர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து இவர்களுடன் சேர்த்து இன்னும் மூவரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

– லெட்சுமி பிரியா