சென்னை:

சென்னை தாம்பரத்தை அடுத்த ஓரகடம் பகுதியில் மது மயக்கத்தில் தன்னுடன் அழைத்து வந்த குழந்தையை தொலைத்தார் தந்தை. ஆனால், காவல்துறையினர் தொலைந்த அந்த குழந்தையுடன் ஒரே நாளில் கண்டுபிடித்துமீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சேந்தமங்களம் பகுதியை சேர்ந்தவர், குமர பிரசாத்.  கூலித்தொழிலாளியான இவர் சில நாட்களுக்கு முன்பு தனது 3வயது மகன் குமரகுரு வுடன் ஒரகடம் சென்று மது வாங்கி அங்கேயே குடித்துள்ளார். குடி ஓவரானதும் சாலையிலேய மயங்கி விழுந்துள்ளார். பின்னர் சில மணி நேரம் போதை தெளிந்ததும் தனது மகனை தேடி உள்ளார். அவனை காணவில்லை.

இதுகுறித்து ஓரகடம் காவல்துறையில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், அவர் மது மயக்க்ததில் விழுந்துகிடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது குழந்தையை மர்ம நபர் ஒருவர் அழைத்துச் செல்வது தெரிய வந்தது. இதுகுறித்து தனிப்டைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தையை கடத்திய மர்ம நபர், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் அந்த சிறுவனை விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

சிறுவன் குமரகுரு அனாதையாக நிற்பதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காவல் துறையினரிடம் தெரிவித்தை தொடர்ந்து, குமரகுருவை மீட்ட போலுசார் ஓரடகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர்  குழந்தையின்  பெற்றோரை வரவழைத்து, அவர்களுக்கு அறிவுரை கூறி குழந்தையை ஒப்படைத்தனர்.

குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் குமரபிரசாத் காவலர்களிடம் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்து சென்றார்.