சென்னை:

தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் எனத் தெரிவித்த எச்.ராஜாவுக்கு பிராமணர் சங்கம் கண்டனம் தெரித்துள்ளது.

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை போல, தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் எஜ எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு அரசியல்தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சமூகவலைதளங்களிலும் ராஜாவுக்கு கடும் கண்டனம் எழுந்தது.

இதையடுத்து தனது பதிவை ராஜா, நீக்கினார்.

இந்த நிலையில் எச்.ராஜாவுக்கு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரித்துள்ளது.  எதிர்காலத்தில் பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவிப்பதை எச்.ராஜா தவிர்க்க வேண்டும் எனவும் பிராமணர் சங்கம் தெரிவித்துள்ளது.