ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

2வது இடத்தில் பிரேசில் உள்ளது. இந்த நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்தை நெருங்குகிறது.  இன்னமும் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர்.