கொல்கத்தா: கலவரத்தை விரும்புவர்களாக இருந்தால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.

மேற்குவங்க மாநில சட்டசபை தேர்தல் சில மாதங்களில் நடக்க உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் மால்டா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மமதா பானர்ஜி கலந்து கொண்டு பேசியதாவது: பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வருவது கலவரங்களை ஊக்குவிக்கும் செயலாகும். கலவரத்தை விரும்பினால் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.

நான் தனியாக இல்லை, மக்களின் ஆதரவு எனக்கு உண்டு. ஆகையால் தோற்கடிக்க முடியாது. என் உயிர் இருக்கும் வரை மேற்குவங்க மாநிலத்தில் பாஜகவை அனுமதிக்க மாட்டேன் என்று பேசினார்.