லண்டன்: இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான காலத்தை ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது பிரிட்டன்.
இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை செயலாளர் பிரீத்தி கூறியிருப்பதாவது, “இந்த நேரத்தில் அரசு மேற்கொண்டுள்ள முன்னோடியில்லாத திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். வெளிநாட்டவர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேற முடியாவிட்டால் அவர்கள் ஜூலை இறுதி வரையில் இங்கிலாந்தில் தங்க முடியும் என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
விசா நீட்டிப்புக்காக உள்துறை அலுவலகங்களைத் தொடர்பு கொண்டவர்கள் விமானம் மற்றும் எல்லை கட்டுப்பாட்டுகள் நீக்கப்பட்டவுடன் கூடிய விரைவில் சொந்த நாடுகளுக்கு திரும்புவர்.
மேலும், இங்கிலாந்தில் நீண்டகாலம் தங்குவதற்கான விசாக்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான ஏற்பாடுகள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன” என்றார்.