ண்டன்

கொரோனா இந்தியா போன்ற நாடுகளில்  உருவாகாதது நல்ல நேரம் என ஒரு பொருளாதார நிபுணர்  கருத்து தெரிவித்து இருக்கிறார்.

சீனாவில் தொடங்கிய கொரொனா வைரஸ் தொற்று தற்போது கட்டுக்குள் வந்து விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதே வேளையில் 100க்கும் மேற்ப்ட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவி உள்ளது.  இத்தாலி, ஈரான், தென் கொரியா போன்ற நாடுகளில் இந்த பாதிப்பு மிகவும் அதிகரித்து வருவதால் உலக சுகாதார மையம் கொரோனாவை கொள்ளை நோய் என அறிவித்துள்ளது.

சீனா கொரோனாவை மிகவும் திறமையாகக் கையாண்டதாக உலக நாடுகள் பலவும் பாராட்டுக்கள்  தெரிவித்துள்ளன.   அமெரிக்காவின் கோல்ட்மேன் சாச் முதலீடு நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் பிரிட்டிஷ் பொருளாதார நிபுணருமான ஜிம் ஒ நெய்ல் சீனாவைப் புகழும் சாக்கில் இந்தியாவை மட்டம் தட்டியிருக்கிறார்.

அவர் சி.என்.பி.சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ”சீனாவுக்குக் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத ஒரு நெருக்கடி உண்டாகி இருந்தாலும் அந்நாட்டினர் மிகவும் திறமையாக அதைச் சமாளித்து இருக்கின்றனர். நல்லவேளையாக  இந்த வைரஸ் இந்தியா போன்ற நாடுகளில் உருவாகவில்லை. ஏன் என்றால் இந்திய நிர்வாகத்தின் தரம் சீனா அளவுக்கு இருந்திருக்காது,” என்று தெரிவித்திருந்தார்..

நிபுணரின் இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவரது பேச்சுக்குச் சரமாரியாகப் பதிலடி கொடுத்து வருகின்றனர். அவர்கள்  இந்திய அரசு கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் இத்தகைய கருத்துக்கள் தேவையற்றது எனக் கூறி உள்ளனர்.