டெல்லி: முன் எப்போதும் இல்லாத வகையில் இது மக்களை பற்றி கவலைப்படாத பட்ஜெட் அறிக்கை என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் சாட்டி உள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார். ப. சிதம்பரம் மேலும் கூறியதாவது: மக்களை இவர்கள் கைவிட்டுவிட்டனர். நிதிநிலை அறிக்கை உரையைக் கேட்பவர்களுக்கு புரியாத வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏமாற்றியுள்ளார்.

குறிப்பாக, பல்வேறு பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்திருந்தாலும் அதுபற்றிய எந்த குறிப்பும் உரையில் இல்லை. அவர் மக்களை ஏமாற்றி உள்ளார். குறிப்பாக ஏழைகள், உழைக்கும் வர்க்கத்தினர், புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பில் எந்தக் குறைப்பும் அறிவிக்கப்படவில்லை.அனைவரும் எதிர்பார்த்ததை போலவே தேர்தல் வர உள்ள மாநிலங்களுக்கு கூடுதல் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அந்த அறிவிப்புகள் வெறும் ஒதுக்கீடுகளாகவே உள்ளன. அவை திட்டங்களாக மாற ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைக்கு வர நீண்ட காலம் எடுக்கும் என்றார்.