டில்லி:

டில்லியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

டில்லியில் சதார் பஜார் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள கட்டடம் ஒன்று இன்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. இப்பகுதி மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

தகவலறிந்த தீயணைப்பு படையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.