திருச்சி

திருச்சி மலைக்கோட்டை அருகே ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் மரணமடைந்துள்ளனர்.

திருச்சி நகரில் உள்ளது மலைக்கோட்டை.  இந்தப் பகுதியில் ஒரு மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.  இந்த கட்டிடத்தில் 6 குடும்பங்கள் வசித்து வந்ததாக தெரிகிறது.   இடிபாடுகளில் சிக்கி கார்த்திக் என்பவரும் அவரது ஐந்து வயது மகன் ஹரீஷும் மரணம் அடைந்துள்ளனர்.  ராஜேஸ்வரி என்னும் பெண்மணி படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை 2 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், கட்டிடத்தில் உள்ளவர்களை மீட்கும் பணியில் போலீசார், மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.   இடிந்து விழுந்த கட்டிடம் மிகவும் பழைய கட்டிடம் என சொல்லப்படுகிறது.   போலீசார் இது குறித்து வழக்கு பதிந்துள்ளனர்.