டெல்லி:
உலகிலேயே  மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் தலைநகர் டெல்லியில் உருவாக்கப் பட்டு உள்ளது. 10ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட இந்த சிகிச்சை மையம்  10 நாட்களில் அமைக்கப்பட்டது. இந்த சாதனைக்குரிய சிகிச்சை மையத்தை டெல்லி ஆளுநர் அனில் பஜாஜ் இன்று திறந்து வைத்தார்.