சோபியா: சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியின் காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார் இந்திய வீரர் தீபக் குமார்.

ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது 72வது ஸ்டிரான்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை தொடர். இதில், ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில், கஜகஸ்தான் நாட்டின் பைனியாசோவ் உடன் மோதினார் இந்தியாவின் தீபக் குமார்.

இப்போட்டியில், 5-0 என்ற கணக்கில் வென்று, இத்தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார் தீபக் குமார். இந்திய ஓபன் தொடரில் தங்கம் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி என்று ஏற்கனவே பதக்கங்களை வென்றவர் தீபக் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.