ராமேஸ்வரம்,

மிழகத்தை சேர்ந்த ராமேஷ்வரம் மீனவர்  22வயதேயான  பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் காரணமாக, அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், மீனவர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

இந்நிலையில் போஸ்ட்மார்டத்தின்போது அவரது கழுத்தில் பாய்ந்திருந்த குண்டு அகற்றப்பட்டது. அந்த குண்டு இலங்கை கடற்படையினருக்கு சொந்தமான என தெரியவந்துள்ளது.

மீனவர்கள் போராட்டம்  இரண்டாவது நாளாக  தொடர்ந்து வருகிறது..

இனிமேல் தமிழகத்தில்  இதுபோல ஒரு நிகழ்வு நடைபெறாத வகையில் மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும்… அதுவரை இறந்தவரின் உடலை வாங்க மாட்டோம் எனவும் மறுத்து போராடி வருகின்றனர்.

ஆனால், இலங்கை கடற்படை, நங்கள் சுடவில்லை என்று மறுத்து வருகிறது.   மேலும், எல்லை தாண்டி வரும் மீனவர்களை கைது செய்யவே கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் உயிரிழந்ததாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.

‘இருப்பினும் இப்பிரச்சனையில் விசாரணை நடத்தப்படும் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்ஜோவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட குண்டு, இலங்கை கடற்படையினர் உபயோகப்படுத்தும் துப்பாக்கியின்  குண்டு என்பது தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக இந்த பிரச்சினை மேலும் சூடுபிடித்து உள்ளது.