டோக்கியோ:

ஜப்பானில் மணிக்கு 320 கி.மீ. வேகம் செல்லும் அதிநவீன புல்லட் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.


ஜப்பானின் செண்டாய் முதல் மொரியோகா வரை இந்த அதிவேக ரயிலை ஓட்டி சோதனை நடத்தினர். இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்னும் 3 ஆண்டுகளுக்கு சில சோதனைகள் நடத்தப்படவுள்ளதாகவும், உலகிலேயே அதிவேகம் இயங்கும் சக்கரங்கள் கொண்ட புல்லட் ரயில் இது என்றும் ஜப்பான் கிழக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.