மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் பும்ரா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் பெயர்கள், அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
விளையாட்டுத் துறை சாதனையாளர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது அர்ஜுனா விருது. எனவே, இந்த 2020ம் ஆண்டிற்கான அர்ஜுனா விருதைப் பெற, பல வீரர் – வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன.
இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் மற்றும் கால்பந்து நட்சத்திரங்கள் ஆகியோரின் பெயர்கள் ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், தற்போது பும்ரா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைப் பட்டியலில் இணைந்துள்ளது.
பரிந்துரைப் பட்டியலை வரும் ஜுன் 3ம் தேதிக்குள் அனுப்ப வ‍ேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டும் இவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், சர்வதேச அரங்கில் 2 ஆண்டுகளை மட்டுமே நிறைவு செய்திருந்த காரணத்தால் இவருக்கு கிடைக்கவில்லை. ஜடேஜாவுக்கு கிடைத்தது.
பும்ரா தற்போதுவரை, 14 டெஸ்ட் போட்டிகளில் 68 விக்கெட்டுகளையும், 64 ஒருநாள் போட்டிகளில் 104 விக்கெட்டுகளையும், 50 டி-20 போட்டிகளில் 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவருக்கு தற்போது 26 வயதாகிறது.
மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மீது, குடும்பப் பிரச்சினைத் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், அவரின் பெயர் பரிந்துரை செய்யப்படவில்லை.