புதுடெல்லி: இந்தியா டெஸ்ட் வெற்றியை தக்கவைத்துக் கொள்வதில், பும்ரா மிக முக்கியமான துருப்புச் சீட்டாக இருப்பார் என்று கருத்து தெரிவித்துள்ளார் ஆலன் பார்டர்.

தன்னை பும்ராவின் மிகப்பெரிய விசிறி என்று கூறியுள்ள ஆலன் பார்டர், மேலும் கூறியுள்ளதாவது, “இரு அணிகளுக்கு இடையில் பெரிய வித்தியாசத்தை பும்ராவால் ஏற்படுத்த முடியும்.

அவர் தன்னை உடல்ரீதியாக முழு தகுதியுடன் வைத்துக்கொண்டால், அவரால் நன்றாக சாதிக்க முடியும். ஆட்டத்தை வெல்லும் திறனுடைய ஒருவரைப் பற்றி இங்கே நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

ஆனால், நமது பிட்ச்சில் குறைந்தளவே பவுன்ஸ் செய்ய முடியும் என்பதால், அவருக்காக நான் கவலைப்படுகிறேன். இந்தியா வெல்வதற்கு இவர் மிகவும் முக்கியம்.

இவர், கடந்தமுறையைப் போலவே மிகச்சிறப்பாக செயல்பட்டு, சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்தால், அது டெஸ்ட் தொடரில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்” என்றுள்ளார் பார்டர்.