சென்னை:

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு நேற்று சென்னை மருத்துவமனையில் உயிரிழந்த நபரின் உடல் சென்னை காசிமேடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த இறுதி நிகழ்வுக்கு அவரது குடும்பத்தினர் 4 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவர்களின் முன்னிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்திருக் கிறது. நேற்றைய நிலவரப்படி 690 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். ஏற்கனவே 6 பேர் உயிரிழந்திருந்த நிலையில், 7வது நபராக நேற்று மாலை,, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாசிட்டிவால் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்தது.

உயிரிழந்த அந்த பெண்ணின் உடல் காசிமேடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வின்போது, அந்த பெண்ணின் உறவினர்கள் 4 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அவர்களும் கொரோனா வைரஸ் தடுப்பு உடைகளை அணிந்துகொண்டு, இறந்த உடலுக்கு கடைசி மரியாதை செய்தனர்.