ராஜ்கார்

யணிகள் பேருந்து ஒன்று இமாசலப் பிரதேச நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி 7 பேர் மரணம் அடைந்தனர்.

இமாசலப் பிரதேசத்தில் சோலான் மாவட்டம் மன்னவ் பகுதியில் இருந்து ராஜ்கார் நோக்கி இன்று காலை பேருந்து ஒன்று கிளம்பியது.    ராஜ்கார் நெடுஞ்சாலையில் பயனம் செய்துக் கொண்டிருந்த இந்த பஸ் நயி நேட்டி என்னும் இடத்தில் ஒரு வளைவில் திரும்பியது.   அப்போது அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகியது.

பேருந்தில் பயணம் செய்த 7 பேர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தனர்.  அத்துடன் பஸ்ஸில் பயணம் செய்த பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.  அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களின் பலர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.