பொலிவியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் 22பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 37பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

accident

பொலிவியாவின் தலைநகர் லா பஸ்ஸில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நகரம் சல்லபட்டா. நேற்றிரவு சல்லபட்டா நகரில் சென்றுக் கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் சென்ற பயணிக்ள் 22பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், விபத்தில் காயமடைந்த 37பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சல்லபட்டா மேயர் தெரிவித்துள்ளனர்.