சென்னை,

ரெயில்வே தண்டவாளங்களில் பராமரிப்பு செய்யப்பட உள்ளதால், சென்னையில் இருந்து புறநகர்களுக்கு செல்லும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பேருந்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வரும் நிலையில், புறநகர் ரெயில் சேவை மாற்றப்பட்டும், ரத்தும் செய்யப்பட்டிருப்பது பயணிகளுக்கு பெரும் இன்னங்களை கொடுத்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் பலர் ரெயில் சேவையையை நம்பியே வேலைக்கும், பள்ளி, கல்லூரிக்கும் சென்று வரும் நிலையில், இன்றும் நாளையும் ரெயில்சேவையை குறைத்தும், ரத்தும் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ரெயில் சேவை மாற்றம் மற்றும் ரத்து குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.15, 9.30, 11.30 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் காலை 10.50, 11.25, 1.05 மணி ரெயில்கள் இன்றும், நாளையும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.

வேளச்சேரி-திருவள்ளூர் காலை 9.05 மணி, திருவள்ளூர்-வேளச்சேரி காலை 11.05 மணி ரெயில்கள் இன்றும், கடற்கரை-திருவள்ளூர் காலை 9.50 மணி, திருவள்ளூர்-கடற்கரை காலை 11.05 மணி ரெயில்கள் நாளையும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

மூர்மார்க்கெட்-அரக்கோணம் காலை 9.10, 11.05, 12.50 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.45 மணி, மூர்மார்க்கெட்-திருத்தணி காலை 10, 11.45 மணி, மூர்மார்க்கெட்-கடம்பத்தூர் காலை 10.30, மதியம் 12 மணி மின்சார ரெயில்கள் இன்றும், நாளையும் பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, நெமிலிச்சேரி ஆகிய நிறுத்தங்களில் நிற்காது.

திருவள்ளூர்-மூர்மார்க்கெட் காலை 10.05, 12 மணி, திருத்தணி-மூர்மார்க்கெட் காலை 9.40 மணி, அரக்கோணம்-மூர்மார்க்கெட் காலை 10.50, 12 மணி, கடம்பத்தூர்-மூர்மார்க்கெட் மதியம் 1.40 மணி ரெயில்கள் 2 நாட்களும் புட்லூர், திருநின்றவூர், நெமிலிச்சேரி, பட்டாபிராம் ஆகிய நிறுத்தங்களில் நிற்காது.

ஆவடி-வேளச்சேரி காலை 8.45, 12.10, 2.40 மணி, சூலூர்பேட்டை-வேளச்சேரி காலை 7.25 மணி, பட்டாபிராம்- வேளச்சேரி காலை 8.45 மணி, கும்மிடிப்பூண்டி-வேளச்சேரி காலை 8.50 மணி, திருத்தணி-வேளச்சேரி காலை 8.50 மணி, திருவள்ளூர்-வேளச்சேரி காலை 11.05, 1.40 மணி, கடம்பத்தூர்-வேளச்சேரி மதியம் 12.05 மணி ஆகிய மின்சார ரெயில்கள் இன்று கடற்கரை-வேளச்சேரி இடையே ரத்துசெய்யப்பட்டுள்ளது.

வேளச்சேரி-ஆவடி காலை 10.15 மணி, வேளச்சேரி-திருத்தணி காலை 11.20 மணி, வேளச்சேரி-திருவள்ளூர் மதியம் 12.15, 2.45 மணி, வேளச்சேரி-பட்டாபிராம் மதியம் 12.55 மணி, வேளச்சேரி-அரக்கோணம் மதியம் 1.35 மணி, வேளச்சேரி-சூலூர்பேட்டை மதியம் 1.55 மணி, வேளச்சேரி-கும்மிடிப்பூண்டி மதியம் 2.55 மணி ஆகிய மின்சார ரெயில்கள் இன்று வேளச்சேரி- கடற்கரை வரை பகுதியாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.

கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் இரு மார்க்கத்திலும் இன்று காலை 9.35 மணி முதல் மாலை 4 மணி வரை முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.
கடற்கரை-வேளச்சேரி ரெயில் நாளை காலை 9.40 மணி முதல் மாலை 4 மணி வரையும், வேளச்சேரி- கடற்கரை ரெயில் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரையும் முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.