சென்னை,

மிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக் காரணமாக பெரும்பாலான இடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை.

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து பலமுறை அரசுடன் பேச்சுவார்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால்  இன்று முதல் (15ந்தேதி ) வேலைநிறுத்தம்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று காலைமுதல் தமிழகத்தில் 90 சதவிகித பேருந்துகள் இயங்க வில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதையடுத்து தென்னக ரெயில்வே பொதுமக்களின் தேவைக்கேற்ப. அதிகமான ரெயில் சேவைகைளை வழங்கி வருகிறது.

அதேபோல் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் பல சிறப்பு ரெயில்களையும் அறிவித்து உள்ளது.

காலை: 7.40 மணி – சென்னை எழும்பூர் – திருநெல்வேலி (வழி: விழுப்புரம், திருச்சி, மதுரை)

( 7.40am – Egmore to Thirunelveli via Trichy, Madurai.)

காலை 10 மணி: நெல்லை – சென்னை சென்ட்ரல் (10am – Nellai to Chennai Central.)

காலை 8.00 மணி: சென்னை எழும்பூர் – திருவாரூர் (வழி:  சிதம்பரம், மயிலாடுதுறை)(

(8.00 am – Egmore to Thiruvarur via Chidambaram, Mayiladuthurai)

காலை 8.00 மணி: சென்னை சென்ட்ரல் – கோவை (வழி: காட்பாடி, சேலம், ஈரோடு)

(8,00 am – Chennai Central to Coimbatore via Kaatpadi, Erode.)

 

மாலை 3.35 மணி: தஞ்சாவூர் – எழும்பூர் (வழி: மயிலாடுதுறை, சிதம்பரம்)

(3.35pm – Thiruvarur to Egmore via Mayiladuthurai, Chidambaram)

இரவு 8.30 மணி:  சென்னை சென்ட்ரல் – கோவை (வழி: காட்பாடி, சேலம், ஈரோடு)

(8.30pm – Chennai Central to Coimbatore via Kaatpadi, Erode)

இரவு 11.45 மணி: எழும்பூர் – திருநெல்வேலி (வழி: திருச்சி, மதுரை)

(11.45pm – Egmore to Thirunelveli via Trichy, Madurai)