சென்னை:  

மிழகம் முழுவதும்  இன்று 2வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்கள்.

 

ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவைத்தொகை, வருங்கால வைப்புநிதி நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும்   உள்ளிட்ட 7 அம்சகோரிக்கையை வலியுறுத்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்பட 10 தொழிற்சங்கங்கள் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளன.

இதையடுத்து தமிழக அரசும், தொழிலாளர் ஆணையமும் பலசுற்று பேச்சுவார்த்த நடத்தியும், இரு தரப்பினருக்கும் இடையே எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.  நேற்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில் திடீரென அதுவும் ரத்து செய்யப்பட்டது.

இதன் காரணமாக நேற்று  முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடங்கியது. இதனால் நேற்று தமிழகமெங்கும் பேருந்து சேவை பெருமளவு பாதிக்கப்பட்டது. அரசு பஸ்கள் இயங்காததால் அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் பெரும் பாதிக்கப்பட்டனர்.

நேற்று இரவு பெரும்பாலான பகுதிகளுக்கு பஸ்களே கிடையாது. இதன் காரணமாக மாலை பணி முடித்துவிட்டு வீட்டுக்கு செல்ல முயன்ற பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஒருசில தனியார்  பேருந்துகளிலும் கட்டணக்கொள்ளை நடைபெற்றது.

இந்நிலையில் இன்று 2வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்து வருகிறது.  போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அரசு தனியார் பேருந்துகளை களத்தில் இறக்கி உள்ளது. வெளி மாவட்ட பேருந்துகள் சென்னையில் குவிக்கப்பட்டு வருகின்றன. அதுபோல தனியார் கல்லூரி பேருந்துகளும் களத்தில் இறக்கப்பட்டு வருகின்றன.

இவர்கள் மூலம் இன்று சுமார் 25 சதவிகித தனியார் பஸ் சேவையை சென்னை போன்ற முக்கியமான நகரங்களில் இயக்கி வருகிறது.

நேற்று பல இடங்களில் ஓடிய பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று இயக்கப்படும் தனியா பேருந்துகள் தாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக பொதுமக்களும் பயந்தே தனியார் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள்.  அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவையை தொகையை உடனே வழங்கி, அரசு போக்குவரத்தை முழுமையாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள்  கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழக அரசின் கையாலாகததனத்தால் அரசின்  அனைத்து நிவாகமும் முடங்கி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.