சென்னை:

டிடிவி தினகரனை சந்தித்து, தொழிலதிபர் வைகுண்டராஜன் ஆதரவு தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர்  எம்.எல்.ஏவாக இருந்த ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத் தொகுதியில், அ.தி.முக. (சசிகலா அணி) சார்பாக டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார்.

அவரை இன்று தட்சிணமாற நாடார் சங்கத்தின் தலைவர் டி.ஆர். சபாபதி, செயலாளர் ஆர். சண்முகவேல் உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அவர்களுடன் பிரபல தொழிலதிபர் வைகுண்டராஜனும் வந்திருந்தார். அவரும் தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

கனிம மணல் ஆலைகளை மூடியதால் அரசு மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்ட வைகுண்டராஜன் நேரடியாக வந்து தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.