டெல்லி:
காலியாக உள்ள 2 தொகுதிகளுக்கான மாநிலங்களவை இடைத்தேர்தல் ஆகஸ்டு 24ந்தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

உத்தரபிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பெனி பிரசாத் வர்மாவும், கேரளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வீரேந்திர குமாரும் சமீபத்தில் இறந்ததைத் தொடர்ந்து, அவர்களின் இடங்கள் காலியாக உள்ளது. அவர்களில் வர்மாவின் பதவிக்காலம் 2022 ஜூலை வரையும், குமாரின் பதவிக்காலம் 2022 ஏப்ரல் வரையும் உள்ளது.
இதையடுத்து, அவர்களின் இடங்களுக்கு இடைத்தேர்தலுக்கன அறிவிப்பை இந்திய  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  அதன்படி ஆகஸ்டு 24ந்தேதி தேர்தல்  நடைபெறும். மேலும், வாக்கு எண்ணிக்கை  அன்றைய தினம்  மாலையே நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.