டில்லி:

காலியாக உள்ள 3 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜனவரி 29-ம் தேதி நடக்கிறது.

இது குறித்து க தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வார், ஆஜ்மீர், மேற்குவங்க மாநிலத்தில் உலுபெரியா ஆகிய 3 லோக்சபா தொகுதிகளும் காலியாக உள்ளது.

இதற்கான இடைத்தேர்தல் ஜனவரி 29-ம் தேதி நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஜனவரி 10-ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் பரிசீலனை 11-ம் தேதி நடக்கிறது. மனு வாபஸ் பெற 15ம் தேதி கடைசி நாளாகும். 29-ம் தேதி வாக்குப் பதிவு நடக்கும். பிப்ரவரி 1-ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.