டெல்லி: சிஏ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய சார்ட்டட் அக்கவுண்ட்ஸ் நிறுவனமான ஐசிஏஐ அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அனைத்து வித தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. சில முக்கியம் வாய்ந்த தேர்வுகள் மட்டும் ரத்து செய்யாமல் ஒத்திவைக்கப்படுகிறது.
தேர்வுகளை ரத்து செய்வதோ அல்லது ஒத்திவைப்பதோ அந்த அந்த மாநில அரசுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கையில் உள்ளது என்று மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இந் நிலையில் சிஏ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருடம் இருமுறை சிஏ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மே மாதம் நடைபெற இருந்த தேர்வு கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் தேர்வு ஜூலை 29ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தேர்வை ரத்து செய்வதாக ஐசிஏஐ அறிவித்துள்ளது.
தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுடன் சேர்த்து எழுதிக் கொள்ளலாம் என ஐசிஏஐ கூறியுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களைத் மாணவர்கள் www.icai.org  இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.