டெல்லி:
கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட  பட்டய கணக்காளர் (சிஏ- CA) தேர்வை நவம்பரில் நடத்த உள்ளதாக  இந்திய பட்டய கணக்காளர் அமைப்பு உச்சநீதி மன்றத்தில் கூறியுள்ளது.

நாடு முழுவதும் பட்டய கணக்காளர் படிப்புக்கான தேர்வு  வழக்கமாக  ஜூலை மாதம் நடைபெறும்.  ஆடிட்டர் பணிகளுக்கு நடத்தப்படும்  இந்த தேர்வானது இந்த  ஆண்டும்  ஜூலை மாதம் நடத்தப்படும் என இந்தியா தணிக்கையாளர் சங்கத்தின் சார்பில் ஏற்கனவே  அறிவிக்கப் பட்டிருந்தது.
ஆனால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பு லாக்டவுன் காரணமாக, தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், தேர்வை தள்ளி வைக்கப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தள்ளி வைக்கப்பட்ட  CA தேர்வை நவம்பரில் நடத்த முடிவு செய்துள்ளதாக இந்திய பட்டய கணக்காளர் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இது தொடர்பான வழக்கில் இந்திய பட்டய கணக்காளர் அமைப்பு இந்த தகவலை கூறியுள்ளது.