டில்லி:

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் நேற்று டில்லி திரும்பினார். இன்று காலை குடியரசு தலைவர் மாளிகைக்கு வந்த ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி வரவேற்றார்.

இதைதொடர்ந்து டில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்து பேசினார். சோனியா காந்தியின் உடல்நலம் குறித்து ஜஸ்டின் ட்ரூடோ விசாரித்துள்ளார்.