டில்லி,

திமுக கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு உயர்மட்ட பாதுகாப்பான இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதை விலக்கிக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களுக்கு உயர்மட்ட பாதுகாப்பான என்எஸ்ஜி எனப்படும் கமாண்டோ படை பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பாதுகாப்பு இந்தியா முழுவதும் உள்ள 15 முக்கிய அரசியல் தலைவகளுக்கு தற்போதும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் தற்போது 3 தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் துணைப்பிரதமர் அத்வானி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு தற்போது அளித்து வரும் பாதுகாப்பை குறைத்துக்கொள்ள உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி, உபி முதல்வர் அகிலேஷ் யாதவ், அஸ்ஸாம் மற்றும் பீகார் முன்னாள் முதல்வர்கள் தருண்கோகய், லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்க முடிவு செய்தது.

இதற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இசட் பிளஸ் பாதுகாப்புக்காக ஒரு தலைவருக்கு,  குண்டு துளைக்காத வாகனம், 2 பாதுகாப்பு வாகனங்கள், 40 பாதுகாப்பு கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.