”திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம், 09-09-2020 (புதன்கிழமை) அன்று காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும்” என்றும், அன்றைய தினம், கட்சியின் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தி.மு.கழக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று வேட்புமனு பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளோர், திமுக தலைமை அலுவலகத்தில் ரூ.1000 கட்டணம் செலுத்தி வேட்புமனு பெற்றுக்கொள்ளலாம்.
திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவோர் வேட்புமனு கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்த வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய நாளை (3ந்தேதி) கடைசி நாள். நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை தாக்கல் செய்யலாம்.
நாளை மறுநாள் (4ந்தேதி) காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடைபெறும்.
5ந்தேதி மதியம் 1 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெறலாம்.
5ந்தேதியன்று மாலை 4 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.