பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட  லெப்டினண்ட் உமர் பயஸ்க்கு டில்லி இந்தியா கேட்டில் ஏராளமான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்..

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் ஹர்மைன் பகுதியைச் சேர்ந்தவர் உமர் பயஸ்(23). இந்திய ராணுவத்தின் ராஜ்புதானா ரைபில்ஸ் பிரிவில் லெப்டினண்ட்டாக கடந்த ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தனது உறவினரின் திருமணத்தில் பங்கேற்க விடுப்பில் சென்றார். அப்போது அவர் முகமூடி அணிந்த பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார். பிறகு,  சடலமாக மீட்கப்பட்டார்., அவரது உடல் முழுவதும்  கொடூரமாக வெட்டப்பட்டிருந்தது.

உமர் பங்கேற்க இருந்த  திருமண நிகழ்ச்சியே, அவருக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் நிகழ்ச்சியாகிவிட்டது.  அவரது உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து டில்லி இந்தியா கேட்டில் பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்றிணைந்து ஊர்வலமாக சென்று மெழுகுவர்த்தி ஏந்தி உமர் பயஸ்க்கு அஞ்சலி செலுத்தினார்கள்.