டெல்லி: தமிழகம் உள்பட 5மாநில சட்டமன்ற தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் வாக்கு அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, 80வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், ஊனமுற்றோர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர் என பலதரப்பினர் தபால் ஓட்டு அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்த நிலையில்,  நாடாளுமன்ற மக்களவையின் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர் ஒருவர், வெளிநாடு வாழ் இந்தியர்களும் தபால் வாக்கு அளிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் தெரிவித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர்  பிரசாத்,  வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மின்னணு தபால் ஓட்டு போட வசதியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் திருத்தம் செய்யும் யோசனையை தேர்தல் கமிஷன் முன்வைத்தது. அதை அமல்படுத்துவதில் உள்ள சவால்களை களைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போதைய நிலையில், நடைபெற உள்ள , 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு தபால் ஓட்டு வசதியை அளிப்பது சாத்தியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.