மதுரை: கொடுமணல் அகழாய்வில் கிடைத்த 12 பொருட்களின் வயதை அறியும் கார்பன் சோதனை செய்ய தொல்லியல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழ் சார்ந்தவையாக இருக்கும்போது, அங்கு பணியில்  சமஸ்கிருதம் அறிந்தவர்களை நியமித்திருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மதுரைஅருகே உள்ள கிழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் மற்றும் தாமிரபரணி  பகுதிகளில் பல்வேறு இடங்களில் மத்திய, மாநில தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வு தொடர்ந்து நடத்தவும், அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பாதுகாக்கவும்  உத்தரவிடக்கோரி பல்வேறு மனுக்கள் உயர்நீதி மன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தமனுக்கள் மீதான சிரணை  நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, மத்திய தொல்லியல்துறை சார்பில், அகழ்வாய்வு தொடர்பாக  பல்வேறு தகவல்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதில், கொடுமணலில் நடத்தப்பட்ட அகழாய்வின்போது, தமிழில் உள்ள நெடில் ஆ, ஈ போன்ற எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும், இதுபோன்று மேலும் பல நெடில் எழுத்துகள் கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டதுடன், இதுவரை நடைபெற்ற  அகழ்வாய்வில் எங்கும் தமிழில் நெடில் எழுத்துகள் கிடைக்கவில்லை. கொடுமணலில் தான் தமிழ் எழுத்துக்கள் கண்டறியப்பட்டது என்று கூறப்பட்டது.

இதுகுறித்து உத்தரவிட்ட நீதிபதிகள்,  தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக தமிழ் எழுத்துக்கள் கிடைக்கப்பட்டுள்ளது. உடனடியாக, 12 பொருட்களை கார்பன் டேட்டிங் சோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி  கிடைப்பெற்ற 12 பொருளை வயது, காலங்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டதுடன், இதற்கான செலவை  தமிழகஅரசு ஏற்று 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும், கிழடி மற்றும் பல்வேறு  இடங்களில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகளின் தற்போதைய நிலை என்ன?, அதிக கல்வெட்டுகள், எழுத்துகள் தமிழில் இருக்கும்போது சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம் ஏன்? என பல்வேறு கேள்விகளை மத்திய  தொல்லியல்துறையிடம் எழுப்பினர். இதற்கு பதில் தெரிவித்த தொல்லியல்துறை, பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. அகழ்வாராய்ச்சி பொறுப்பாளர்கள் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளனர். விரைவில் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்யப்படும் என்றனர்.

இதையடுத்து, கொடுமணலில் கண்டுடெடுக்கப்பட்ட  12 பொருட்களை அமெரிக்காவிற்கு அனுப்புவது  தொடர்பாக 1 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.