டெல்லி: நீட் தேர்வை ரத்து செய்ய கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் வரும் 13ம் தேதி நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை மேற்கொண்டு வருகின்றது.

கொரோனா காரணமாக, இந்த தேர்வை நடத்த நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கொரோனா குறையும் வரை தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக நல ஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து இருக்கிறது. தேர்வு தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி,  மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.