நடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரி மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி, மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த விசாரணையில் தனுஷ் தனது கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை சமர்பித்திருந்தார் .

ஆனால் நடிகர் தனுஷ் போலி ஆவணம் தாக்கல் செய்ததாக அவர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறி கதிரேசன் மதுரை ஜேஎம் 6ம் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்கள் .

இந்த மனு மாஜிஸ்திரேட் முத்துராமன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் 22 பேர் கொண்ட சாட்சிகளின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. இதில், 6 சாட்சியங்களின் வாக்குமூலம் நேற்று பதிவு செய்யப்பட்டன. மீதமுள்ள சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக விசாரணையை ஜன. 21க்கு தள்ளிவைத்த மாஜிஸ்திரேட், அன்றைய தினம் சாட்சியம் தொடர்பான ஆவண, ஆதாரங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.