ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் கோகுண்டா சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக பிரதாப் லால் பீல். 56 வயதான இவர் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக 35 கொண்ட பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் நீமுச் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், கலந்து கொண்ட ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ பிரதாப் லால், அங்கு அறிமுகாமான தன்னுடன் நெருக்கமாக பழகி வந்தார் என்றும், தனது மனைவியை விவகாரத்து செய்து விட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த எம்எல்ஏ, தனது மனைவியை விவகாரத்து செய்துள்ளார். இதையடுத்து, கடந்த நவம்பர் 8-ஆம் தேதி குடும்பத்தினரின் சம்மதத்தை பெற்றுவிட்டதாக கூறி உதய்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு வரவழைத்து அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதாப் லால் மீது புகார் அளித்துள்ள அந்த பாதிக்கபப்ட்ட பெண்மணி, தன்னை திருமணம் செய்யாமலும் தனது போன் கால்களை எடுக்காமலும் இருப்பதாக தெரிவித்து, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலியல் வன்புணர்வு புகாரால் ராஜஸ்தான் மாநில அரசியலில் பரபரப்பு எழுந்துள்ளது.