டெல்லி: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் திருப்பதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

திருச்சுழி தொகுதியில் தங்கம் தென்னரசு வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார். ஆனால் இது தொடர்பாக தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் தங்கம் தென்னரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை அணுகவும் இந்த விவகாரத்தை விசாரித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. சென்னை ஐகோர்ட் வழக்கை முடித்து வைத்து நிலையில், அதை எதிர்த்து திருப்பதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந் நிலையில், இந்த மனுவானது இன்று பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்து விட்டதால் தாங்கள் விசாரிக்க முடியாது என கூறி வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.