சென்னை:

மிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் கட்சிகளிடையே மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கூட்டுறவு சங்க  தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வேலூரைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர்  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு வரும் 2ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.