திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை கற்பழித்த விவகாரத்தில், வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மேலத் தெருவை சேர்ந்தவர் தனபாலன். இவரது மகள் ஓவியா. வழக்கறிஞரான இவர், மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “மதுரை வண்டியூர் பாண்டிக்கோவில் தெருவைச் சேர்ந்த வக்கீல் தேவக்குமாரும், தானும் கடந்த 2016ம் ஆண்டு முதல் காதலித்து வந்ததாகவும், அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னிடம் தேவக்குமார் நெருங்கி பழகினார் என்றும் கூறியுள்ள ஓவியா, தற்போது பெற்றோரின் தூண்டுதலால் திருமணத்திற்கு தேவக்குமார் மறுப்பு தெரிவிக்கிறார் என்றும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் அனைத்து மகளை காவல்நிலைய காவலர்கள், விசாரணை நடத்தி வக்கீல் தேவக்குமார், அவரது தந்தை விஜய நடராஜன் ஆகிய இருவர் மீதும வழக்கு பதிந்துள்ளனர்.