பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலை மாதம் கும்பல் வன்முறை தொடர்பாக கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திர குஹா, அபர்ணா சென் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிஹாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா திரையுலகினர் 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது வருத்தமளிப்பதாகவும், தேசத்துரோகி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.