சென்னை:

திமுக சார்பில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அனைத்துக்கட்சி கூட்டம்  சென்னை அண்ணா அறிவாலயத்தில்  தொடங்கியது.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தலைவர்களை வரவேற்றார். இந்த கூட்டத்தில், காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்ப்பு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வைகோ, திருமாவளவன், ஜி,ராமகிருஷ்ணன், முத்தரசன் மற்றும் கி.வீரமணி உள்ள பலர் பங்கேற்று உள்ளனர்.