சென்னை :

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை (9ந்தேதி) விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், காவிரி வழக்கு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தமிழகம் சார்பாக ஆஜராக மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே தலைமையிலான குழுவினர்  நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்து உள்ளனர்.

இதன் காரணமாக,  வழக்கறிஞர் சேகர் நாப்தே தலைமையிலான குழுவினர் இன்று இரவு சென்னை வர உள்ளதாகவும்  கூறப்படுகிறது.