சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்காததைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இன்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர். புதுக்கோட்டையில் ஸ்டாலின் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது

சென்னையில் 4 இடங்களில் தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்தது. சென்னை மேற்கு மாவட்டத்தில் ஜெ.அன்பழகன் தலைமையிலும், சென்னை கிழக்கு மாவட்டத்தில் சேகர்பாபு தலைமையிலும், சென்னை வடக்கு மாவட்டத்தில் மாதவரம் சுதர்சனம் தலைமையிலும், சென்னை தெற்கு மாவட்டத்தில் மா.சுப்ரமணியன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். வேலூரில் துரைமுருகன் தலைமையிலும், தஞ்சையில் வைகோ தலைமையிலும், சென்னை அண்ணா சாலையில் கனிமொழி எம்.பி. தலைமையிலும் போராட்டம் நடந்தது. இதேபோல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது.