சென்னை அருகே உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சென்னை அருகே பிரபலமான எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் சிலர், சமீப நாட்களாக அடுத்தடுத்து தற்கொலை செய்துக்கொண்டனர். இவ்விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி காவலர்களை விசாரணை மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் சி.பி.சி.ஐ.டி தனிப்படை காவலர்கள் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.