சென்னை:

ஜினிக்கு வழங்கிய சலுகை சசிகலாவுக்கு பொருந்தாது என மத்தியஅரசின் மத்திய நேரடி வரி வாரியம் (Central Board of Direct Taxes/ CBDT) உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது.

சசிகலா தரப்பில், தன்மீதான வருமான வரி வழக்கை திரும்பப் பெறக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய நேரடி வரி வாரியம் பதில் தெரிவித்து உள்ளது. மீட்கப்படக்கூடிய தொகை ரூ.1 கோடி இருந்தாலும், ரஜினிக்கு வழங்கப்பட்ட சலுகை வி.கே.சசிகலாவுக்கு பொருந்தாது என்று தெரிவித்து உள்ளது.

டிகர் ரஜினிகாந்த் கடந்த  2002 முதல் 2005 வரையிலான  மூன்று நிதியாண்டுகளில் வரி ஏய்ப்பு நடத்தியதான வருமான வரித்துறை புகார் கூறியது. இது தொடர்பாக, ரஜினி  ரூ.66,22,436 அபராதம் கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், ரஜினிக்கு அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில், 2014ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த வாரம் ரஜினிகாந்திற்கு நிவாரணம் அளித்து, மத்திய இயக்குநர் வரி வாரியம் (சிபிடிடி) எடுத்த முடிவின் அடிப்படையில், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இருந்து ரஜினிக்கு  எதிரான மேல்முறையீட்டை வருமான வரித்துறை திரும்பப் பெற்றது. வருமானத்தின் முழு விவரங்களையும் மறைத்து, தவறான தகவல்களை வழங்கியதற்காக 2005 ஆம் ஆண்டில் நடிகருக்கு ரூ .66 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவான அபராதத் தொகைக்கு வழக்கு தொடருவதில்லை என்று கொள்கை முடிவ எடுத்துள்ளதாக கூறியது. இதையடுத்து, ரஜினிகாந்த் வழக்கை திரும்ப பெற்றார்.

இந்த நிலையில், ஏற்கனவே கடந்த 2008ம் ஆண்டு வி.கே.சசிகலா தரப்பில் வருமான வரித்துறைக்கு எதிராக தொடரப் பட்ட வழக்கில்,, தற்போது ரஜினிக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையை சுட்டிக்காட்டி, இதை சுட்டிக்காட்டி, தங்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ரஜினிக்கு வழங்கப்பட்டது போல சலுகை தனக்கும் வழங்க வேண்டும் என்று சசிகலா தரப்பில்   உயர்நீதி மன்றத்தில்  வேண்டுகோளை விடுக்கப்பட்டது. அதே விதியை அவருக்கும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கை  நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்  விசாரித்தது. அப்போது, ஐ-டி துறை ஆலோசகர் டி.ஆர்.செந்தில்குமார் நீதிமன்றத்தில் ஆஜரனார்.

சசிகலா  வழக்கில் ஏற்கனவே விசாரணை தொடங்கப்பட்டதால், தற்போது வழங்கப்படும் நிவாரணம் அவருக்கு  பொருந்தாது என்றும் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இணைக்கப்பட்ட குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும், மீட்கக்கூடிய தொகையின் மதிப்பு ரூ .1 கோடிக்குக் குறைவாக இருந்தாலும் சிபிடிடியின் முடிவு வி.கே.சசிகலாவுக்கு பொருந்தாது என்று கூறினார்.

சிபிடிடி கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் 8ந்தேதி ஒரு சுற்றறிக்கை மூலம்  இதற்கான அறிவிப்பை வெளியிட்டதாகவும், அதில்  மீளக்கூடிய தொகை ரூ .1 கோடிக்கும் குறைவாக உள்ள உரிமைகோரல்களுக்கான சட்ட நடவடிக்கைகளை திரும்பப் பெற அனுமதிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

ஐ.டி ஆலோசகரின் சமர்ப்பிப்பைப் பதிவுசெய்த நீதிபதிகள்,  வழக்கு விசாரணையின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு  உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.

சசிகலா மீதான வருமானவரித்துறை வழக்கு 1994-1995 மதிப்பீட்டு ஆண்டில் சசிகலா தாக்கல் செய்த வருமானம் தொடர்பானது . 80 ஏக்கர் நிலத்தை வாங்கியதையும் சசிகலா மறைத்து வைத்திருந்ததை, விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (டி.வி.ஐ.சி) நடத்திய சோதனையின்போது கண்டறியப் பட்டது. அதன்  அடிப்படையில் ஐ-டி துறை, 48 லட்சம் ரூபாய் வரி செலுத்த உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.