டில்லி:

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என சி.பி.ஐ., கூறியுள்ளது.

 

2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி உள்ளிட்ட 19 பேரை டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.

வழக்கின் முழுமையாக தீர்ப்பு கிடைக்கவில்லை எனவும் சட்ட ஆலோசனை நடந்து வருவதாக சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் கூறியிருந்தார். இந்நிலையில் இத்தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை நீதிமன்றம் முறையாக ஆய்வு செய்யவில்லை என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.