டில்லி

வீடியோகோன் நிறுவனததுக்கு கடன் வழங்க லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐசிஐசிஐ வங்கி முன்னாள் அதிகாரி சந்தா கோச்சருக்கு சிபிஐ லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக பணி புரிந்த பெண் அதிகாரி சந்தா கோச்சர்.   இவர் வீடியோகோன் நிறுவனத்துக்கு கடந்த 2009 முதல் 2011 வரையிலான கால கட்டத்தில் ரூ. 3250 கோடி மதிப்புள்ள கடனை ஆறு தவணைகளில் அளித்துள்ளார்.   விடியோகோன் நிறுவனம் அதை திருப்பிச் செலுத்தாததால்  சிபிஐ விசாரணை செய்தது.

அந்த விசாரணையில் வங்கி அதிகாரி சந்தா கோச்சாரின் கணவருக்கு ரூ.64 கோடி மதிப்பிலான வீடியோகோன் நிறுவன அதிபரின் துணை நிறுவனம் ஒன்று அளிக்கபட்டது தெரிய வந்துள்ளது.    இந்த துணை நிறுவனம் வங்கிக் கடன் பெற சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்கு வீடியோகோன் அதிபர் வேணுகோபல் தூத் லஞ்சமாக அளித்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதை ஒட்டி கடந்த மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை  பதிந்தது.   அந்த குற்றப்பத்திரிகையில் சந்தா கோச்சார், அவர் கணவர் தீபக் கோச்சார், விடியோகோன் அதிபர் வேணுகோபல் தூத் உள்ளிட்ட சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிபிஐ சந்தா கோச்சார் உள்ளிட்டோருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்துள்ளது.   இந்த நோட்டிஸ் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் இமிக்ரேஷன் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.