.

டில்லி

ன்று காலை சிபிஎஸ்ஈ 12ஆம் வகுப்பு அக்கவுண்டன்சி பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் வாட்ஸ் அப் மூலம் அவுட் ஆகி உள்ளது.

தற்போது சி பி எஸ் ஈ க்கான 12ஆம் வகுப்பு தேர்வு நடந்து வருகிறது.    கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வு நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.    ஏற்கனவே இந்த தேர்வின் வினாத்தாட்கள் பாதுகாப்பின்றி டில்லி மெட்ரோவில் எடுத்துச் செல்லப்படுவதாக ஒரு வழக்கறிஞர் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை முதல் டில்லி நகரில் வாட்ஸ் அப் மூலம் இந்த தேர்வின் அக்கவுண்டன்சி வினாத்தாள் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.   இந்த வினாத்தாள் கல்வி அமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கும் வந்துள்ளது.

தனக்கும் அந்த வினாத்தாள் வந்ததை உறுதி செய்த அமைச்சர், “இந்த வினாத்தாளை நான் கல்வித்துறை இயக்ககத்தின் செயலாளருக்கு அனுப்பி உள்ளேன்.  இந்த வினாக்களும்  உண்மையான வினாத்தாளில் உள்ள கேள்விகளும் ஒத்துப் போகிறதா என அவர்கள் ஆராய்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்”  என தெரிவித்தார்.