டில்லி:
சிபிஎஸ்சி 12வது வகுப்புகளுக்கான  பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று தேர்வு முடிகள் வெளியிடப்பட்டுஉள்ளது.

நாடு முழுவதும் இருந்து 12-வது வகுப்பு தேர்வை 11 லட்சத்துக்கும் மேற்பட்ட  மாணவ-மாணவிகள் எழுதி உள்ளனர். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, தேர்வுத்தாள்கள் திருத்தும் பணி தாமதமானால்,  தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதில் தாமதமாகி வந்தது.த
இந்த நிலையில், ஜூலை  14ந்தேதி (நாளை) பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் இன்று மாலை வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது சிபிஎஸ்இ 12வது வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.
www.cbse.nic.in என்ற இணையதளத்தில் மாணாக்கர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.